சோமாலியாவில் பிரபல ஊடகவியலாளர் கொலை!...
Nov 21, 2021 170 views Posted By : YarlSri TV
சோமாலியாவில் பிரபல ஊடகவியலாளர் கொலை!...
சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர் மொகடிஷூவில் தற்கொலை குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது கொல்லப்பட்டார்.
அப்டியாஸ் அஃப்ரிக்கா என அழைக்கப்படும் அவர், பயங்கரவாத ஆயுத குழுவான அல்-ஷாபாப்பின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து வந்ததுடன், அது குறித்து பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இந்த தாக்குதலின்போது மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு அல்-ஷபாபே காரணம் என அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடாகவியலாளர் மொகடிஷூ வானொலியுடன் இணைந்து தமக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தமைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்தத் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது மிலேசத்தனமான பயங்கரவாத நடவடிக்கை என சோமாலிய பிரதமர் மொகமட் ஹூசீன் ரோபில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இராணுவ ஒத்துழைப்புடன் செயல்படும் சோமாலிய அரச படைகளுடன் கடந்த ஒரு தசாப்தகாலமாக அல்-ஷாபாப் ஆயுதக்குழு தாக்குதலை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago