Skip to main content

தலதா மாளிகை வளாகத்தை காணொளி எடுத்த பங்களாதேஷ் பிரஜை கைது!..

Nov 06, 2021 178 views Posted By : YarlSri TV
Image

தலதா மாளிகை வளாகத்தை காணொளி எடுத்த பங்களாதேஷ் பிரஜை கைது!.. 

ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படும் பகுதிகளை ட்ரோன் கமரா கொண்டு காணொளி படம் எடுத்த பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 



நேற்று காலை 8.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக தளதா மாளிகை காவல்துறையினர் தெரிவித்தனர்.



தலதா மாளிகை வளாகத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ததாகவும், தனது வலையொளி அலைவரிசைக்காக அந்த காணொளிகளை எடுத்ததாகவும் பங்களாதேஷ் பிரஜை காவல்துறை விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளார்.



இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் ட்ரோன் கமரா, தொலைபேசி, கடவுச் சீட்டு உள்ளிட்டவற்றை பொறுப்பேற்றுள்ள காவல்துறையினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



கண்டி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் சமில் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, சுற்றுலா காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் இத்தமல்கொட தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை