சர்தார் வல்லபாய் பட்டேல் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்தார்: மோடி புகழாரம்!
Oct 31, 2021 158 views Posted By : YarlSri TV
சர்தார் வல்லபாய் பட்டேல் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்தார்: மோடி புகழாரம்!
முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
ஜி-20 மாநாட்டிற்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு கூறியிருப்பதாவது:-
இந்தியா எப்போதுமே திறமையாகவும், உணர்திறன் கொண்டதாகவும், எச்சரிக்கையாகவும், அடக்கமாகவும், வளர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பினார். அவர் எப்போதும் தேச நலனுக்கு முன்னுரிமை அளித்தார்.
இன்று அவரிடமிருந்து உத்வேகத்தைப் பெற்று, நாடு வெளிப்புற மற்றும் உள் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக மாறி வருகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் பல சகாப்தங்களாக உள்ள பழமையான தேவையற்ற சட்டங்களில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ளது.
நிலம், நீர், காற்று, விண்வெளி என அனைத்து துறைகளிலும் இந்தியாவின் திறன்கள் மற்றும் உறுதிப்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளது.
ஒரே பாரத், சிறந்த இந்தியா என்பதற்காக தனது உயிரைக் கொடுத்த சர்தார் பட்டேலுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. பட்டேல், வரலாற்றில் மட்டும் அல்ல அனைத்து இந்தியர்களின் இதயங்களிலும் வாழ்கிறார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago