ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநரை அறைந்த மர்மநபரால் பரபரப்பு
Oct 24, 2021 150 views Posted By : YarlSri TV
ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநரை அறைந்த மர்மநபரால் பரபரப்பு
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பதவியேற்பு விழாவில் அபிதின் கோரம் மேடையில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, மேடையின் வெளியே இருந்து திடீரென உள்ளே வந்த மர்மநபர் ஆளுநரின் பின்னந்தலையில் பளார் என அறைந்தார். பின்னர், ஆளுநரிடம் சண்டையிடத் தொடங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டதில், அந்த நபரின் பெயர் அயுப் அலிசாதே என்பது தெரியவந்துள்ளது.
ஒருமுறை ஈரானின் துணை ராணுவப் புரட்சிப் படையில் பணியாற்றியபோது, சிரியாவில் கிளர்ச்சிப் படைகளால் ஆளுநர் அபிதின் கோரம் கடத்தப்பட்டுள்ளார். அதனால், இந்த தாக்குதல் சம்பவமும் தனிப்பட்ட வெறுப்புக் காரணமாக நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், தனது மனைவிக்கு ஒரு ஆண் மருத்துவ பணியாளர் கொரோனா தடுப்பூசி போட்டதால் அந்த மர்மநபர் கோபத்தில் இருந்ததாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் அபிதின் கோரம் கூறுகையில், " சம்பந்தப்பட்ட நபர் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் சிரியாவில் இருந்தபோது எதிரிகளால் சூழப்பட்டு ஒரு நாளைக்கு 10 முறை சவுக்கடி வாங்கி இருக்கிறேன். பலமுறை என் நெற்றியில் துப்பாக்கி ஏற்றப்பட்டுள்ளது. அந்த எதிரிகளுக்கு இணையாக இந்த நபரை கருதுகிறேன். இருப்பினும் அவரை மன்னிப்போம்" என்றார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago