வெள்ளத்தில் மிதக்கும் கேரளா மக்களுக்கு உதவ மத்திய அரசு!
Oct 18, 2021 157 views Posted By : YarlSri TV
வெள்ளத்தில் மிதக்கும் கேரளா மக்களுக்கு உதவ மத்திய அரசு!
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் தேவைப்படும் மக்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிவிட் செய்துள்ளார்.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு ஆறுகள், அணைகள், ஏரிகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பல மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக நேற்று முன்தினம் வரை 15 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் 6 உடல்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: மழைக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பொதுமக்கள் எடுக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் 105 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல முகாம்கள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய உள்துறை அமித் ஷா டிவிட்டரில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கேரளாவின் சில பகுதிகளில் நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைப்படும் மக்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ என்.டி.ஆர்.எப். குழுக்கள் ஏற்கனவே அனுப்பட்டுள்ன. அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்ததனை செய்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago