Skip to main content

ஓட்டமாவடி மையவாடி தொடர்பாக இடம்பெறவிருந்த கூட்டம் காவல்துறையினரின் தலையீட்டால் இரத்து!.

Sep 26, 2021 198 views Posted By : YarlSri TV
Image

ஓட்டமாவடி மையவாடி தொடர்பாக இடம்பெறவிருந்த கூட்டம் காவல்துறையினரின் தலையீட்டால் இரத்து!. 

மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும்  ஓட்டமாவடி மஜ்மா நகரில் நிலவும் இடப்பற்றாக்குறை தொடர்பாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம்  காவல்துறையினரின் தலையீட்டால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார். 



ஓட்டமாவடி பிரதேச சபையில்  இந்த கூட்டம்  இன்று காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து இக் கூட்டத்தில் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு கூட்டம் ஆரம்பமாக இருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் அங்கு வந்த வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான காவல்துறை குழுவினர் சென்று கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவே கூட்டத்தை நடத்த வேண்டாம் என்றும் கூட்டத்துக்கு வந்த நபர்களை கலைந்து செல்லுமாறும் வேண்டிக் கொண்டனர்.



இதனையடுத்து இக் கூட்டத்தை இரத்து செய்ததையடுத்து அங்கு வந்திருந்த பிரமுகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக அவர் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை