கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது!
Sep 18, 2021 155 views Posted By : YarlSri TV
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது!
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் A9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து பயணித்த ஊழியர் சேவை பேருந்து முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஒரே திசையில் பயணித்த பேருந்தின் முன் சென்ற முச்சக்கரவண்டி சடுதியாக வீதியின் குறுக்காக திரும்பி கிராமத்துக்கு செல்ல முற்பட்டவேளை பேருந்து மோதியுள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டி பாரிய விபத்தில் சிக்கியது. சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago