கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது!
Sep 18, 2021 147 views Posted By : YarlSri TV
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது!
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் A9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து பயணித்த ஊழியர் சேவை பேருந்து முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஒரே திசையில் பயணித்த பேருந்தின் முன் சென்ற முச்சக்கரவண்டி சடுதியாக வீதியின் குறுக்காக திரும்பி கிராமத்துக்கு செல்ல முற்பட்டவேளை பேருந்து மோதியுள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டி பாரிய விபத்தில் சிக்கியது. சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
இலங்கை கொழும்பில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தான் நாட்டின் 74வது சுதந்திர தின நிகழ்வு!!!
-
இந்தியாவின் கேரள மாநிலத்தில், இறக்க அனுமதி கேட்டு அரசாங்கத்தை அணுகிய திருநங்கை ஒருவர் தொடர்பில் முழு பின்னணி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீரா கபீர். 35 வயதாகும் இவர் வேலைக்காக பலமுறை நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு, நிராகரிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார். அரசு பள்ளியில் பகுதி நேர வேலையில் பணியயமர்த்தப்பட்ட அனீரா கபீருக்கு இரண்டு மாதங்களில் ஏமாற்றமளிக்கும் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் காரணம் ஏதுமின்றி அவரை வேலையில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளது. இந்த நிலையிலேயே, வேறு வழியேதும் இல்லை என முடிவு செய்த கபீர், ஜனவரி மாதம் மாநில சட்ட உதவி சேவைகளை அணுகி, கருணைக் கொலைக்கு அனுமதி கோரி மனு அளிக்க ஒரு சட்டத்தரணியின் ஆலோசனை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த சம்பவம் மாநில நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவரது நிலை குறித்து மேலதிக தகவல் தெரிந்து கொள்ள அரசு முன்வந்தது. இந்த நிலையில் அவருக்கு அரசு சார்பில் மீண்டும் ஒரு வேலை ஏற்பாடு செய்து அளிக்கப்பட்டது. பாலக்காடு பகுதியில் பிறந்த அனீரா கபீர் தாம் ஒரு திருநங்கை என அடையாளம் கண்ட பின்னர் பல ஆண்டுகளாக போராடி வருகிறார். குடும்பத்தினரிடம் இது தொடர்பில் தெரிவிக்கவும் அவரால் முடியாமல் போயுள்ளது. தன்னைப் போன்ற சமூக மக்களுடன் வாழ வேண்டும் என விரும்பி, வீட்டைவிட்டு வெளியேறி பெங்களூரு நகருக்கு சென்ற அவருக்கு கசப்பான அனுபவங்களே மிஞ்சியுள்ளது. இதில் வெறுத்துப்போன அவர் ஒருகட்டத்தில் சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார். வேலைக்கான நேர்முகத் தேர்வில் பலமுறை அவமானங்களையே எதிர்கொண்டதாக கூறும் அனீரா கபூர், மாணவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லக் கூடும் என அஞ்சுவதாக கூறி பல பள்ளி நிர்வாகங்கள் வேலை தர மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா?
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1462 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1462 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago