சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயிரை பறித்துள்ளது!
Sep 17, 2021 146 views Posted By : YarlSri TV
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயிரை பறித்துள்ளது!
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயிரை பறித்துள்ளது. மேலும், 60 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின் தென்மேற்கு சிசுவான் மாகாணத்தில் நேற்று அதிகாலை 4.33 மணிக்கு சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.0 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த அதிர்வுகள் 10 கிமீ தூரம் வரை உணரப்பட்டது. இந்த பூகம்பத்தால் லுக்சியான் மாவட்ட பகுதியில் 3 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்துள்ளனர். 730 வீடுகள் இடிந்துள்ளன.
7,290 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சம்பவ இடத்தில் 890 தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர், மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த பூகம்பத்தால் மக்கள் பீதி அடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். கடும் மழையும் பெய்து வருவதால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதே மாகாணத்தில் கடந்த 2008ம் ஆண்டு, ரிக்டேர் அளவில் 8 புள்ளிகள் கொண்ட பயங்கர பூகம்பம் தாக்கியதில் பல ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago