நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை
Feb 09, 2022 87 views Posted By : YarlSri TV
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்த பதில் ஆகியவை தொடர்பில் நேற்று சபையில் சர்ச்சை ஏற்பட்டதுடன் அது சில நிமிடங்கள் நீடித்தது.
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்துக்களை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ''கிசு கிசு''க்கள் என வர்ணித்ததால் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச 27இன்கீழ் 2இல் மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் , நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விரைவில் அதற்கான பதிலை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
அக்கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் நிதி அமைச்சரோ ,நிதி இராஜாங்க அமைச்சரோ இல்லாதால் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் அளித்தார். அதன்போது 27 கீழ் 2 கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும் எனினும்,எதிர்க்கட்சித்தலைவரின் ''கிசு கிசு''க்களுக்கு பதில் வழங்க முடியாது என்றார்.
அதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ,
மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள், நாட்டின் நிதிப்பற்றாக்குறை பிரச்சினைகள் அரசுக்கு ''கிசு கிசு''க்களாகிவிட்டனவா? அரசு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ''கிசு கிசு''க்களாகத்தான் பார்க்கின்றதா எனக்கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளிக்கையில், எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும். ஏனையவை ''கிசுகிசு''க்களாக இருப்பதால் பதில் வழங்க முடியாது என்றே நான் கூறினேன் என்று குறிப்பிட்டார்.
நான் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை நிதியமைச்சரிடம் எழுப்பியுள்ளேன் . ஆனால் இக்கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் நிதியமைச்சரோ, நிதி இராஜாங்க அமைச்சரோ இல்லை. நாட்டின் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் பொறுப்புடன் சபையில் இருக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago