Skip to main content

சைப்ரஸிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யும் இலங்கை

Feb 07, 2022 80 views Posted By : YarlSri TV
Image

சைப்ரஸிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யும் இலங்கை 

சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது.



சைப்ரஸின் டெரா கேவிஸ் நிறுவனத்திடமிருந்து 450,000 பீப்பாய் மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.



குறித்த நிறுவனம் சமர்ப்பித்த விலை மனுக் கோரலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 78 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்ய குறித்த நிறுவனம் இணங்கியுள்ளது.



டொலர் பிரச்சினை காரணமாக எரிபொருள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கொடுப்பனவு கிடைக்கும் வரையில் எரிபொருளை விநியோகிக்காது காத்திருக்கும் நிலையை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிகின்றது.



சில எரிபொருள் கப்பல்கள் ஒரு வாரத்திற்கு மேல் கடலில் எரிபொருளுடன் காத்திருந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு வருடாந்தம் 400 முதல் 500 ட்ரில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை