Skip to main content

இந்திய சிறையில் பரிதவிக்கும் இலங்கையர்கள்! சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை

Feb 04, 2022 106 views Posted By : YarlSri TV
Image

இந்திய சிறையில் பரிதவிக்கும் இலங்கையர்கள்! சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை 

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, இரண்டு மாதத்திற்கும் அதிக காலம், சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, 4 இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுவிக்குமாறு, நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.



கைதுசெய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர் நால்வரும், படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் கரை ஒதுங்க நேரிட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.



கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டக்களப்பிலிருந்து கடல் தொழிலுக்கு சென்றவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



எல்லை தாண்டி கடற்றொழில் ஈடுபட்டதாகக்கூறி, அவர்களைக் கைது செய்தமை சட்டத்திற்குப் புறம்பானதாகும். எனவே, சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் நால்வரையும் விடுவித்து, இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை