பம்பலப்பிட்டியில் 7வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறுவன்! - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
Feb 01, 2022 77 views Posted By : YarlSri TV
பம்பலப்பிட்டியில் 7வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறுவன்! - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்
கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
இதன்படி, குறித்த சிறுவன் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் கடந்த 28ம் திகதி பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் 7வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த நீதவான் சிலானி பெரேராவின் உத்தரவின் பேரில் சட்டத்துறை வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் ராகுல் ஹக்கினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் நடைபெற்றது. சிறுவன் உயிரிழந்த தினத்தன்று பெற்றோர் வீட்டில் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவன் கடந்த 28ம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பியதாகவும், அன்றைய தினம் பிரத்தியேக வகுப்புகள் இடம்பெறாது என சிறுவன் தனது தாயிடம் தொலைபேசி ஊடாக கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் அன்று மதியம் பலத்த சத்தம் கேட்டதாகவும், சிறுவன் தரையில் வீழந்து கிடப்பதைப் பார்த்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சிறுவனின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago