இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு.....
Jan 30, 2022 81 views Posted By : YarlSri TV
இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு.....
இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
அதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெற்றிகரமான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையின் தலைமைத்துவத்திற்கும், சுகாதார அமைச்சிற்கும், முன்னிலை சுகாதார ஊழியர்களுக்கும் மற்றும் கொரோனா தடுப்பூசி வழங்கலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவினால் 5 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், அவை கிடைப்பதற்கு முன்னதாகவே இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கக் கூடியதாகக் காணப்பட்டமை மகிழ்ச்சிக்குரியது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago