இலங்கை பிரதமருக்கு சிகிச்சை அளிக்க பிரித்தானியாவில் இருந்த வந்த பிரபல மருத்துவ நிபுணர்
Jan 29, 2022 75 views Posted By : YarlSri TV
இலங்கை பிரதமருக்கு சிகிச்சை அளிக்க பிரித்தானியாவில் இருந்த வந்த பிரபல மருத்துவ நிபுணர்
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த உபாதைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரித்தானியாவில் இருந்து பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் (Prof. Hilali Noordeen) அண்மையில் இலங்கை வந்ததாக தெரியவந்துள்ளது.
பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் என்பவர் பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான எலும்பியல் மற்றும் முதுகெலும்பு சத்திர சிகிச்சை நிபுணராவார்.
பேராசிரியர் கடந்த திங்கள் கிழமை இலங்கைக்கு வந்துள்ளதுடன் கொழும்பு நவலோக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சிகிச்சை செய்துள்ளார்.
பேராசிரியர் நூர்தீனுடன் மேலும் ஒருவர் மயக்க மருந்து நிபுணரும் வந்திருந்ததுடன் பிரதமருக்கு சிகிச்சை அளித்த பின்னர் இருவரும் அன்றிரவே பிரித்தானியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் இலங்கை வந்து, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சிகிச்சை அளித்தமை தொடர்பான தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டிருந்தார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago