கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நீதிக்காக கோரப்படும் பொதுமக்களின் ஆதரவு!
Jan 29, 2022 107 views Posted By : YarlSri TV
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நீதிக்காக கோரப்படும் பொதுமக்களின் ஆதரவு!
இலங்கையில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போகச்செய்யப்பட்ட அல்லது தாக்குதல்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பில் நீதிக் கோரி கவனஈர்ப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, கோட்டை தொடரூந்து நிலையத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது, குறித்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை கண்டுபிடிக்கவும். நீதியை நிலைநாட்டவும் பொதுமக்களின் ஆதரவு கோரப்பட்டது.2010ஆம் ஆண்டு காணாமல் போகச்செய்யப்பட்ட கேலிச்சித்திர செய்தியாளர் பிரகீத் எக்னலிகொட, 2000ஆம் ஆண்டு கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தின் சர்வதேச செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன், கொழும்பின் புறநகர் அத்திட்டியவில் வைத்து கொல்லப்பட்ட சண்டே லீடர் ஸ்தாபகர் லசந்த விக்கிரமதுங்க, தாக்குதலுக்கு உள்ளான கீத் நோயர் உட்பட்ட செய்தியாளர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
அத்துடன் ஊடக நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலும் இந்த துண்டுபிரசுரங்கள் அமைந்திருந்தன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago