அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதி விரைவில்!
Dec 17, 2021 118 views Posted By : YarlSri TV
அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதி விரைவில்!
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியை வழங்க வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இணங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி, பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதி செய்யப்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும், விரைவில் டொலர் வழங்கப்பட்டால் பொருட்களை விடுவிக்க முடியும் எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் 25 மில்லியன் டொலர்களை விடுவிக்க இணங்கியுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான பணம் வழங்கும் பணி இன்று முதல் நடைபெற உள்ளது.
நாணய மாற்று விகிதக் கொள்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago