துப்பாக்கி முனையில் கினியா அதிபர் கைது ராணுவம் ஆட்சி!
Sep 07, 2021 128 views Posted By : YarlSri TV
துப்பாக்கி முனையில் கினியா அதிபர் கைது ராணுவம் ஆட்சி!
கோனாக்ரி: மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிடமிருந்து விடுதலை பெற்றது. அந்நாட்டில் 2010ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே (83) வெற்றி பெற்று அதிபரானார்.
தொடர்ந்து அதிபராக இருந்த அவர், 3வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார். ஆனால், அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இவரது ஆட்சி காலத்தில், அலுமினிய தாது பொருட்கள் ஏற்றுமதியால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைநகர் கோனாக்ரியில் துப்பாக்கி முனையில் அதிபர் ஆல்பா காண்டே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசுத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவ கர்னல் மமாடி டம்போயா, அதிபர் ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்தார். அதிபர் ஆல்பா காண்டே சிறைவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago