பஞ்ச்ஷிர் மாகாண தலைநகருக்குள் நுழைந்துவிட்டோம் -தலிபான் அறிவிப்பு!
Sep 06, 2021 166 views Posted By : YarlSri TV
பஞ்ச்ஷிர் மாகாண தலைநகருக்குள் நுழைந்துவிட்டோம் -தலிபான் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய கிளர்ச்சி குழுவினர் மட்டும் தலிபான்களுக்கு அடிபணியாமல் சண்டையிட்டு வருகிறார்கள். அந்த மாகாணத்தை சுற்றி வளைத்த தலிபான்கள் தேசிய கிளர்ச்சி குழுவை ஒடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்தனர். ஆனால் அதை எதிர்ப்பு படையினர் திட்டவட்டமாக மறுத்தனர். தாங்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் தலிபான்கள் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் பஞ்ச்ஷிர் மாகாணத்தின் தலைநகருக்குள் நுழைந்துவிட்டதாக தலிபான்கள் இன்று கூறி உள்ளனர். மாகாண தலைநகர் பஜாரக்கை ஒட்டிய ருக்கா காவல் தலைமையகம் மற்றும் மாவட்ட மையம் தங்கள் வசம் வந்துவிட்டதாகவும், எதிர் படைகள் ஏராளமான உயிரிழப்புகளைச் சந்தித்ததாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பஜாரக்கில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...!
-
.புரேவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.!
-
புண்ணாக்கு சாப்பிட்டு கோட்டாபய மீது கோபத்தை வெளிப்படுத்திய இளைஞர்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago