காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பெற போராடுவேன் - ராகுல் காந்தி
Aug 11, 2021 156 views Posted By : YarlSri TV
காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பெற போராடுவேன் - ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் சென்றார்.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி நேற்று ஸ்ரீநகர் சென்றார். ஸ்ரீநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:
எங்கள் குடும்பம் டெல்லியில் வசிக்கிறது. அதற்கு முன் அலகாபாத்திலும், அதற்கு முன் காஷ்மீரிலும் வசித்து வந்தது. காஷ்மீரிகளின் பழக்க வழக்கங்கள், சிந்தனை ஓட்டம் ஆகியவை என்னிடமும் உள்ளது.
பாராளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம், பெகாசஸ் விவகாரம் குறித்து பேச முயற்சித்த போதெல்லாம், எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. காஷ்மீர் பிரச்சினையை அன்பு மற்றும் ஈடுபாட்டின் மூலம் வேறு வழியில் தீர்க்க முயற்சித்தோம். ஆனால் பா.ஜ.க. அனைத்தையும் சிதைத்து விட்டது. காஷ்மீர் மக்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன்.
அன்பு மற்றும் புரிதலின் உறவை நான் விரும்புகிறேன். நான் உங்களுக்குத் துணை நிற்பேன், உங்களுக்கான மாநில அந்தஸ்தைப் பெற நான் போராடுவேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் வரும் போது நான் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டேன். தற்போது நான் ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறேன். இது ஓர் ஆரம்பம். நான் மீண்டும் மீண்டும் வருவேன் என தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago