Skip to main content

பிலிப்பைன்ஸ் விமான விபத்து - பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு!

Jul 06, 2021 132 views Posted By : YarlSri TV
Image

பிலிப்பைன்ஸ் விமான விபத்து - பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு! 

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 96 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானது என அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா கூறினார்.



இந்த விபத்தில் 29 வீரா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விமானம் மோதியபோது அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் 6 பேர் பலத்த காயமடைந்தனா். அவா்களில் இருவா் உயிரிழந்தனா் என முதல் கட்ட தகவல் வெளியானது.



சம்பவ இடத்தில் மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.



இந்நிலையில், பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்தான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை