பிலிப்பைன்ஸ் விமான விபத்து - பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு!
Jul 06, 2021 132 views Posted By : YarlSri TV
பிலிப்பைன்ஸ் விமான விபத்து - பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 96 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானது என அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா கூறினார்.
இந்த விபத்தில் 29 வீரா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விமானம் மோதியபோது அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் 6 பேர் பலத்த காயமடைந்தனா். அவா்களில் இருவா் உயிரிழந்தனா் என முதல் கட்ட தகவல் வெளியானது.
சம்பவ இடத்தில் மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டு 50-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்தான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago