தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் மனோ – ஹக்கீம் – அநுர அணிகள் பேச்சு...
Jul 01, 2021 153 views Posted By : YarlSri TV
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் மனோ – ஹக்கீம் – அநுர அணிகள் பேச்சு...
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்று ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
தமிழ் முற்போக்குக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பில் பங்கேற்றனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.வேலுகுமார் , எம்.உதயகுமார் ஆகியோரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் , பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோரும், ஜே.வி.பியின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க .,பிரசார செயலாளர் விஜித ஹேரத் ஆகியோரும் பங்கேற்றனர்.
தற்போது அமுலில் உள்ள தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்படுமானால் அது முற்போக்கு சிந்தனையுடன், ஜனநாயகத்தின் பிரகாரம் இடம்பெறவேண்டும். அனைத்து இன மக்கள் மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கொள்கை ரீதியில் இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஏனைய கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடனும் இந்தச் சந்திப்பு தொடரவுள்ளது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago