Skip to main content

முல்லைத்தீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

Jun 25, 2021 156 views Posted By : YarlSri TV
Image

முல்லைத்தீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு! 

தற்போது நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன்,பயணத்தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது.



இதனால் தொழிலுக்கு செல்லமுடியாது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த அடிப்படையில் வன்னிமண் நற்பணி மன்றத்தின் ஒழுங்குபடுத்தலில், முல்லை வன்னித்தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டம் , தம்பனை கிராமத்தில் கொரோனா பயணத்தடையினால் தொழில் இழந்த மிகவும் தேவையுடைய 36 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள்  நேற்று வழங்கி வைக்கப்பட்டது



குறித்த நிகழ்வில் வன்னிமண் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில், தங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்த, வன்னிமண் நற்பணி மன்றத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை