காவற்துறையினரால் ஏற்படும் அநீதி தொடர்பில் அறிவிக்க விஷேட இலக்கம்!
Jun 20, 2021 170 views Posted By : YarlSri TV
காவற்துறையினரால் ஏற்படும் அநீதி தொடர்பில் அறிவிக்க விஷேட இலக்கம்!
காவற்துறையினரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அதுதொடர்பாக பிரதேச உயர் காவற்துறை அதிகாரிக்கு முறையிட முடியும் என்று காவற்துறை ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
விசேட நிலைமைகளின் கீழ் இவ்வாறானவை இடம்பெற்றால் காவற்துறை கட்டளைப் பிரிவின் 0112 85 48 80 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்போது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தெரிவித்த காவற்துறை ஊடக பேச்சாளர், வனாத்தவில்லு பிரதேசத்தில் 18 ஏக்கர் காணி காத்தான்குடி ஒல்லிபுரம் பிரதேசத்தில் 25 ஏக்கர் காணி தெமட்டகொட பிரதேசத்தில் எட்டு பேர்ச் காணி என்பனவும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
28 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, 8 இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான நிதி, 14 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று மாணிக்கக் கற்கள் உட்பட வாகனங்களையும் காவற்துறையினர் கைப்பற்றி உள்ளார்கள் என்றும்காவற்துறை ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago