திருமுறிகண்டிப்பிள்ளையார் ஆலயத்தால் பத்து இலட்ஷம் பெறுமதியில் 600 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள்!
Jun 15, 2021 146 views Posted By : YarlSri TV
திருமுறிகண்டிப்பிள்ளையார் ஆலயத்தால் பத்து இலட்ஷம் பெறுமதியில் 600 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டடான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திருமுறிகண்டிப்பிள்ளையார் ஆலயத்தால் ஆலய வருமானத்தின் பத்து இலட்ஷம் ரூபா பெறுமதியில் பயணத்தடை காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதரம் பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டடான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திருமுறிகண்டி கிராம அலுவலர் பிரிவில் 400 குடும்பங்களுக்கும் இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் 200 குடும்பங்களுக்குமாக 600 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆலய வளாகத்தில் இருந்து பிரதேச செயலக அதிகாரிகள் வாகனங்களில் பொருட்களை ஏற்றிச் சென்று வீடு வீடாக உலர் உணவு பொருட்களை மக்களுக்கு கையளித்தனர்.
இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டடான் உதவி பிரதேச செயலாளர் இ.றமேஷ் ஒட்டுசுட்டடான் பிரதேச இந்து கலாச்சார உத்தியோகத்தர் சி.மோகனராசா திருமுறிகண்டி,இந்துபுரம் கிராம அலுவலர்கள் திருமுறிகண்டி பிள்ளையாரை ஆலய குரு ஒட்டுசுட்டடான் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்துகொண்டு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago