தாய் இறந்த துக்கத்திலும் கடமை தவறாத ஆம்புலன்ஸ் ஓட்டுநர்- 15 கொரோனா நோயாளிகளை காப்பாற்றினார்!
May 27, 2021 218 views Posted By : YarlSri TV
தாய் இறந்த துக்கத்திலும் கடமை தவறாத ஆம்புலன்ஸ் ஓட்டுநர்- 15 கொரோனா நோயாளிகளை காப்பாற்றினார்!
மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இளைஞர் மதுராவில் ஆம்புலன்ஸ் ஓட்டிவருகிறார். 9 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் இவர். முதல் அலையின் போதும், இப்போதும் ஆம்புலன்ஸ் ஓட்டி மக்கள் சேவையாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது தாயார் கடந்த 15-ந் தேதி மரணம் அடைந்தார். பிரபாத் இரவுப்பணியில் இருக்கும்போது அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நோயாளிகள் பலரையும் மருத்துவமனை அழைத்து வர வேண்டும் என்பதால் அவர் பணியில் இருந்து பாதியிலேயே செல்லவில்லை.
இரவு முழுவதும் 15 நோயாளிகளை அவர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அதன் பிறகே தனது கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார். மேலும் தாயின் இறுதிச்சடங்குகளை முடித்த கையோடு 24 மணி நேரத்தில் பணிக்கு திரும்பினார். கடந்த ஆண்டு ஜூலையில் பிரபாத்தின் தந்தை கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தார்.
அப்போதும் தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு பிரபாத் பணிக்குத் திரும்பினார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபாத்தின் இந்த அர்ப்பணிப்பு உணர்வுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
சென்னை பாரிமுனையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது!
-
விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர்முதன் முறையாக இலங்கைக்கு வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவுக்கு அனுமதி!
-
தன் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு நீக்கப்பட்டு இருப்பதால் நடந்த தவறுக்காக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் மன்னிப்பு கேட்க வேண்டும்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago