Skip to main content

அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 50 பேர் பலி: முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தகவல்!

May 31, 2021 155 views Posted By : YarlSri TV
Image

அரியானாவில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 50 பேர் பலி: முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தகவல்! 

அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது. நோயாளியின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் நேற்று இணையவழியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-



அரியானாவில் இதுவரை 758 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 58 பேர் குணமடைந்து விட்டனர். 50 பேர் பலியானார்கள். மீதி 650 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான ஊசி மருந்தில் 6 ஆயிரம் குப்பிகள், மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. இன்னும் 2 நாட்களில் 2 ஆயிரம் குப்பிகள் கிடைக்கும். இதுதவிர, 5 ஆயிரம் குப்பிகளை கொள்முதல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை