அனைத்து தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு!
Apr 19, 2021 205 views Posted By : YarlSri TV
அனைத்து தேவாலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவு!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 2ஆம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆராதனை மேற்கொள்வதற்கு அனைத்து தேவாலயங்களிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆகவே நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு விடுத்துள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாக விசேட ஆராதனைகள், மத நிகழ்வுகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகவேதான் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி, விசேட பாதுகாப்பு வழங்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு கொச்சிக்கடையிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட ஆராதனைகள் நடைபெறவுள்ளமையினால், தேவாலயத்தை சுற்றியுள்ள சில வீதிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4மணி முதல் மூடப்படுமென அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago