Skip to main content

முககவசம் அணியாதவர்களை கண்டறியும் திடீர் வீதிச் சோதனை!

Apr 25, 2021 158 views Posted By : YarlSri TV
Image

முககவசம் அணியாதவர்களை கண்டறியும் திடீர் வீதிச் சோதனை! 

மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விசேட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கை ஒன்று நகர்பகுதியில் தலைமையக காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி பி.கே. ஹெட்டியாராச்சி தலைமையில் (24) இன்று இடம்பெற்றது இதில் மககவசம் அணியாது பிராயாணித்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.



நாட்டில் அற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து இந்த தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சு வெளிட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுகின்றனரா என அவதானிப்பதற்காக காவல்துறையினர் இந்த தீடீர் விசேட வீதிச் சோதனை நடவடிக்கையினை இன்று காலை முன்னெடுத்தனர்



மட்டக்களப்பு நகர்பகுதியான கல்லடிபாலம், திருகோணமலை வீதி வைச்சந்தி, பிரதானபஸ்தரிப்பு நிலையபகுதி, மற்றும் பார் வீதி போன்ற பிரதான 4 இடங்களில் இந்த வீதிச்சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர் இதன்போது மட்டக்களப்பு நகருக்கு உள்நுழைவோர் வெளியேறும் வாகனங்கள், மோட்டர்சைக்கிள்.



மற்றும் பஸ்வண்டிகளை நிறுத்தி சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு முகக்கவசம் அணியாதவர்களை  எச்சரித்து அவர்களின் விபரங்களை பதிந்து உபதேசம் வழங்கி அனுப்பினர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை