2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு!
Apr 22, 2021 156 views Posted By : YarlSri TV
2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு!
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1998-ம் ஆண்டு ரஷியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுமுயற்சியில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதில் கைகோர்த்தன.
தற்போது மேற்கூறிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பல்வேறு விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளுடன் பதற்றம் நீடித்து வரும் சூழலில் ரஷியா தனக்கென சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தொடர்பாக பிற நாடுகளுடன் ரஷியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் வருகிற 2024-ம் ஆண்டுடன் காலாவதியாகிறது. இந்த சூழலில் தான் 2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
அதே சமயம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெளியேறுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் 2024-க்கு அப்பால் ஒத்துழைப்புக்கான படிவங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் போது, இதுபற்றி முடிவு செய்யப்படும் என்றும் ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago