ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு தளம் மீது தலீபான்கள் தாக்குதல்; 20 வீரர்கள் உயிரிழப்பு!
Apr 07, 2021 196 views Posted By : YarlSri TV
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு தளம் மீது தலீபான்கள் தாக்குதல்; 20 வீரர்கள் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு படையினரும் உயிரிழக்கின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இரு தரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 29ந்தேதி, அமெரிக்கா மற்றும் தலீபான் பயங்கரவாதிகள் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. இதன்பின்னர் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது என முடிவானது.
ஒருபுறம் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வந்தபோதிலும் மறுபுறம் தலீபான்களின் வன்முறை தாக்குதல்களும் தொடர்ந்தன.
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் நார் சிராஜ் மாவட்டத்தில் பாதுகாப்பு தளம் ஒன்றின் மீது தலீபான் பயங்கரவாதிகள் இரவு நேரத்தில் திடீரென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதுதவிர 14 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த மோதலை மாகாண போலீசார் உறுதி செய்துள்ளனர். எனினும் தாக்குதல் மற்றும் உயிரிழப்பு பற்றிய விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.
இந்த தாக்குதலை தலீபான் பயங்கரவாதிகள் அமைப்பினை சேர்ந்த யூசுப் அகமதி என்பவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago