ஈராக் ராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல் - துருக்கி வீரர் பலி
Apr 16, 2021 177 views Posted By : YarlSri TV
ஈராக் ராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல் - துருக்கி வீரர் பலி
ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் துருக்கி நாட்டின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.
அந்த தளத்தை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு 3 ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு ராக்கெட், ராணுவ தளத்தை தாக்கியது. மற்ற இரு ராக்கெட்டுகளும் ஊருக்குள் போய் விழுந்தன.
இந்த தாக்குதலில் துருக்கி வீரர் ஒருவர் பலியானார். ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ஆனால் துருக்கி படைகள், ஈராக்கில் இருந்து கொண்டு குர்தீஷ் இன போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
எனவே துருக்கி படைகள் நடத்தி வருகிற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்த தாக்குதலை குர்தீஷ் போராளிகள் நடத்தி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த குர்தீஷ் இன போராளிகளை துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago