Skip to main content

நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான வெப்பமான காலநிலை நிலவும்!

Apr 05, 2021 193 views Posted By : YarlSri TV
Image

நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான வெப்பமான காலநிலை நிலவும்! 

எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதனால் பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மக்கள் கட்டாயமாக அதிக நீர் அருந்த வேண்டும் என திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.



நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, பொலநறுவை, மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய பிரதேசங்களில் மக்களுக்கு உடலுக்கு உணரக்கூடிய கடுமையான வெப்பமான காலநிலை நிலவும்.



இதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வெளியிடங்களில் வேலை செய்யும் மக்கள் அதிகமாக நீர் அருந்த வேண்டும். நிழல் உள்ள பிரதேசங்களில் மாத்திரம் ஓய்வு எடுக்க வேண்டும்.



வீட்டில் உள்ள சிறுவர்கள் மற்றும் குழந்தைகள்தொடர்பில் அவதானம் எடுக்க வேண்டும். கடினமாக வேலைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளை அல்லது இளம் நிறத்திலான ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

8 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை