கொரோனா பரவலை கட்டுப்படுத்த அஜ்மானில் புதிய நடமாடும் மருத்துவ நிலையம்!
Mar 23, 2021 171 views Posted By : YarlSri TV
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அஜ்மானில் புதிய நடமாடும் மருத்துவ நிலையம்!
அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து பொதுமக்கள் எளிதில் கொரோனா பரிசோதனை செய்வதற்கும், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வசதியாகவும் நடமாடும் மருத்துவ நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, தேசிய அவசர சேவை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறை அமைச்சகம் மற்றும் ஷேக்கா பாத்திமா பிந்த் முபாரக் தன்னார்வ திட்டம் ஆகியவை இணைந்து அஜ்மானில் புதிதாக நடமாடும் மருத்துவ நிலையத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடமாடும் மருத்துவ நிலையத்தை, நேற்று அஜ்மான் போலீஸ் தலைவரும், அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுயைமி தொடங்கி வைத்தார். பின்னர் அவற்றில் உள்ள வசதிகள் குறித்து பார்வையிட்ட அவர் கூறியதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வசதியாக அஜ்மானில் ஏற்கனவே தற்காலிக ஆஸ்பத்திரியை அஜ்மான் பட்டத்து இளவரசர் ஷேக் அம்மார் பின் ஹுமைத் அல் நுயைமி தொடங்கி வைத்தார். தற்போது இந்த நடமாடும் மருத்துவ நிலையம் மூலம், பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இந்த பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றனர். சர்வதேச தரத்துக்கு இணையான வகையில் சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மையத்துக்கு காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பரிசோதனைகளை செய்து கொள்வதுடன், தடுப்பூசிகளையும் போட்டு செல்கின்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த நடமாடும் மருத்துவ நிலையம் மிகவும் உதவியாக இருக்கும். அஜ்மான் பகுதியில் மட்டும் 19 நடமாடும் மருத்துவ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தொடக்க விழாவில் அஜ்மான் மருத்துவத் துறையின் இயக்குனர் ஹமத் தரிம் அல் சம்சி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago