Skip to main content

ரெயில்வே திட்டங்களை முடிப்பதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க ரெயில்வே மந்திரி வேண்டுகோள்!

Mar 11, 2021 179 views Posted By : YarlSri TV
Image

ரெயில்வே திட்டங்களை முடிப்பதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க ரெயில்வே மந்திரி வேண்டுகோள்! 

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது



கடந்த 2013-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரெயில்வேக்கு ரூ.40 ஆயிரம் கோடி முதல் ரூ.45 ஆயிரம் கோடிவரைதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், வரும் நிதியாண்டில் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.



நிலுவையில் உள்ள அனைத்து ரெயில்வே திட்டங்களையும் முடிக்க எங்கள் அரசு பாடுபட்டு வருகிறது. ஆனால் சில மாநில அரசுகள் ஒத்துழைப்பது இல்லை. மேற்கு வங்காளத்தில் ஒரு ரெயில்வே திட்டம், 2014-ம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. மாநில அரசு ஒத்துழைப்பது இல்லை. அப்படி இல்லாமல், ரெயில்வே திட்டங்களை முடிக்க எல்லா மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும்.



இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை