கமலுக்கு நன்றி சொன்ன விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன்!
Mar 06, 2021 194 views Posted By : YarlSri TV
கமலுக்கு நன்றி சொன்ன விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன்!
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்படும் என்று திமுக தெரிவித்ததால், தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்தி வந்தபோது, 6 சீட்டு வேண்டாம் தூக்கி எறியுங்கள் என்றுகட்சியினர் ஆவேச முழக்கம் எழுப்பி வந்தனர். ஆனால், வேறு வழியின்றி 6 சீட்டுக்கு ஒப்புக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அன்றைய தினம் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், சமூக நீதீயை பேசியவர்கள்தான் என்னுடைய தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி இருக்கிறார்கள். என் தம்பி இங்கு வர வேண்டியவர். பொறுத்திருந்து பார்ப்போம் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
கமலின் இந்த அழைப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசிக கட்சிக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை திமுக கொடுத்திருக்கிறது என்று கமலுக்கு பதில் கொடுத்தார் வைகோ.
இதையடுத்து திருமாவளவன், விசிக விருப்பமனு பெறுதலை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது‘’திமுக தலைமையிலான கூட்டனி கட்டுக்கோப்பான முறையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றுதான் 6 தொகுதிகளுக்கு உடன்பட்டோம்’’ என்றார்.
அவர் மேலும், ‘’புதிய கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடுவதை விட பிரபலமான கட்சியில் 6 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை சிறப்பானதாக கருதுகிறோம்’’ என்று தெரிவித்தவர், ‘’மக்கள் நீதி மய்யம் தலைவரின் அழைப்புக்கு நன்றி’’ என்று தெரிவித்தார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago