பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் - நிதிஷ்குமார்
Mar 02, 2021 223 views Posted By : YarlSri TV
பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் - நிதிஷ்குமார்
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், பீகாரில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் கூறியதாவது:
பீகார் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனையிலும் இதனை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான வசதியை மாநில மாநில அரசே ஏற்பாடு செய்து தரும்.
60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. மக்கள் தானாக முன் வந்து முறைப்படி பதிவு செய்து கொரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago