சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான சிவலிங்கம் ‘எம்.எல்.ஏ சீட்டுகளை விற்பதாக புகார்!
Feb 18, 2021 224 views Posted By : YarlSri TV
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான சிவலிங்கம் ‘எம்.எல்.ஏ சீட்டுகளை விற்பதாக புகார்!
கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை கோட்டைவிட்டது ஊரறிந்த உண்மை. அதனால், இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. தேர்தலை எதிர்நோக்கி திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தில் பேசிய அவர், அவ்வளவு எளிதாக ஆளுங்கட்சியினர் நம்மை ஆட்சியைப் பிடிக்க விடமாட்டார்கள் என கூறியிருந்தார். இது சொந்த கட்சியினருக்கே பொருந்துவது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
சேலம் மாவட்டத்தின் ஏற்காடு தொகுதியின் எம்.எல்.ஏவாக அதிமுகவை சேர்ந்த சித்ரா இருக்கிறார். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுகவில் கடுமையான போட்டி நிலவுகிறது. திமுகவின் மூத்த உறுப்பினர்கள் பலர் இந்த தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கும் நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான சிவலிங்கம் மாதேஸ்வரன் என்பவரிடம் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு தான் அந்த எம்.எல்.ஏ சீட் என கூறியிருக்கிறார்.
திமுகவினர் அவர் மீது கடுப்பில் இருக்கிறார்களாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், மாதேஸ்வரன் அண்மையில் தான் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியிருக்கிறார். அவருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்க சிவலிங்கம் முனைப்பு காட்டுவது, திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பேசிய உறுப்பினர்கள் சிலர், சிவலிங்கம் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது. கட்சிப் பதவியை மற்ற கட்சியினரிடம் இருந்து காசு வாங்கிக் கொண்டு கூறு போட்டு விற்பதில் அவர் கில்லாடி. திமுக தலைமையே தனது கைக்குள் இருப்பதாக எல்லாரிடமும் திமிராக பேசுகிறார்.
அதிமுகவில் கட்சித் தாவிய மாதேஸ்வரன் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டால் அதை மக்கள் ஏற்க மாட்டார்கள். எம்.எல்.ஏ சீட்டை கூறுபோட்டு விற்கும் சிவலிங்கம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலம்பித் தள்ளியுள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago