டெல்லியில் நடந்த இந்திய விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதிலும் கவனம்!
Feb 16, 2021 254 views Posted By : YarlSri TV
டெல்லியில் நடந்த இந்திய விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதிலும் கவனம்!
இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்திய பிரச்சனையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்கிறோம் வெளிநாட்டவர் இதில் தலையிட வேண்டாம் என்று சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், அக்ஷய்குமார், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் குரல் கொடுத்து வந்தனர். மத்திய அரசின் அழுத்தத்தால்தான் இவ்வாறு குரல் கொடுத்து வந்ததாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை செய்தன.
விவசாயிகள் எப்படி போராட்டத்தினை தீவிரப்படுத்த வேண்டும், போராட்டத்திற்கு எவ்வாறு நிதி உதவி பெற வேண்டும் என்று உருவாக்கப்பட்டிருந்த டூல்கிட்டினை சர்வதேச சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க் ஷேர் செய்டிருந்ததை அடுத்து, டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, கிரேட்ட தன்பெர்க்கின் பதிவினை அகற்றினர்.
அந்த டூல்கிட்டின் பின்னணியில் இருப்பவர்களை பற்றி டெல்லி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியபோதுதான், பெங்களூரு மவுண்ட் கார்மெல் கல்லூரி மாணவி திஷாரவி சிக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளரான திஷா ரவியை கைது செய்து, சிறையிலும் அடைத்துவிட்டனர்.
திஷா ரவியின் கைதுக்கு ராகுல்காந்தி, ப.சிதம்பரம், அரவிந்த் கெஜ்ரிவால், திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்களும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், பாகிஸ்தானின் ஆளுங்கட்சி திஷாரவிக்கு ஆதரவுதெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ‘’மோடி ஆட்சி, தங்கள் அரசுக்கு எதிரான அனைத்து குரல்களையும் மவுனமாக்குகின்றது’’ என்றும், ‘’கிரிக்கெட் வீரர்களையும், சினிமா பிரபலங்களையும் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்துவது வெட்கக்கேடாது’’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ கட்சி தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமரின்கட்சி தெரிவித்திருப்பதால் இது சர்வதே சதிதானா? என்ற கோணத்தில் சலசலப்புஏற்பட்டிருக்கிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago