Skip to main content

உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டுமென சசிகலா வலியுறுத்தியுள்ளார்!

Feb 24, 2021 214 views Posted By : YarlSri TV
Image

உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டுமென சசிகலா வலியுறுத்தியுள்ளார்! 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரிலுள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு சசிகலா மலர்த்துவி மரியாதை செலுத்தினார். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த சசிகலா, முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.



அப்போது பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தபோது தமிழக மக்கள், உடன்பிறப்புகள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்ததாகவும், அதற்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.



ஜெயலலிதா தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று கூறி சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதை மனதில் நிறுத்தி உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும், அதில் அமோக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் கூறினார். இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன், நானும் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்றும் கூறிய சசிகலா, விரைவில் தொண்டர்களை பொதுமக்களையும் சந்திக்க வருவேன் என்றும் குறிப்பிட்டார்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை