Skip to main content

பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ருவிட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்!

Feb 08, 2021 231 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ருவிட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்! 

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வரும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் கணக்குகளை நீக்கும்படி ருவிட்டர்  நிறுவனத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.



விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதுடன் கோபமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும் 1178 பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் ருவிட்டர் கணக்குகளை நீக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



ஆனால் இதுவரை டுவிட்டர் நிறுவனம் அந்த வேண்டுகோளை முழுமையாக ஏற்கவில்லை எனவும்  கூறப்படுகிறது.



குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் பிரமாண்டமாக டிராக்டர் பேரணி நடத்திய நிலையில் நேற்று முன்தினம் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 3 மணி நேரம் நெடுஞ்சாலை மறியல் போராட்டம் நடத்தினர். டெல்லி எல்லைகளில் அக்டோபர் 2ம் திகதிவரை போராட்டம் நீடிக்கும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை