Skip to main content

ஒரு கல்லூரி மாணவியை பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தார்கள்!

Feb 15, 2021 222 views Posted By : YarlSri TV
Image

ஒரு கல்லூரி மாணவியை பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தார்கள்! 

ஒரு கல்லூரி மாணவியை பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தார்கள்



உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் 20 வயதான பி.ஏ இறுதியாண்டு படிக்கும் மாணவியொருவரை ,அதே மாவட்டத்தில் திலாரியில் உள்ள பமானியா பட்டி பகுதியில் வசிக்கும் ஷரிக் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் .



அதனால் அந்த வாலிபர் அந்த பெண் எங்கு போனாலும் அவரை பின் தொடர்ந்து போய் ,அவரை உரசி சென்றுள்ளார் .மேலும் அந்த பெண் போகும்போதும் வரும்போதும் ஆபாசமாக டபுள் மீனிங்கில் பேசி அவரை டார்ச்சர் செய்துள்ளார் .





அதனால் அந்த பெண் கடந்த பல மாதங்களாக அவரின் தொல்லையால் தூக்கமிழந்து ,நிம்மதியிழந்து தவித்துள்ளார் .மேலும் அவர் போனில் பல ஆபாச மெஸ்ஸேஜையும் அனுப்பி அவரை டார்ச்சர் செய்துள்ளார் .இதனால் அந்த வாலிபர் ஷரிக்கை அவர் பலமுறை எச்சரித்தும் அவர் அடங்கவில்லை .



மேலும் அவரை காதலிக்கவில்லையென்றால் விரைவில் கடத்தி சென்று கல்யாணம் செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார் .இதனால் அந்த பெண் பயந்துபோய் இந்த விஷயத்தை தன்னுடைய பெற்றோரிடம் கூறினார் .அதனால் அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் அந்த வாலிபர் ஷெரிக் மீது போலீசில் புகார் கூறினார்கள் .



போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரின் சேஷ்டைகளை மாறுவேடத்தில் கண்காணித்தார்கள் .அப்போது கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் கையும் களவுமாக சிக்கினார் .அதனால் அந்த ஷெரிக்கை போலீசார் கைது செய்து விசாரிக்கிறார்கள் .


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

23 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை