Skip to main content

6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுமுதல்!

Feb 13, 2021 230 views Posted By : YarlSri TV
Image

6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுமுதல்! 

6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுமுதல் !



சிவகங்கை மாவட்டம், கீழடியில் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு வரும் நிலையில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள், மனித எலும்பு கூடு, முதுமக்கள் தாழி, விலங்கு எலும்பு கூடு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 7 இடங்களில் இந்தாண்டு அகழாய்வு நடைபெறவுள்ளது. கீழடி, அதிச்சநல்லூர் , சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடுதுறை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



கீழடி 7ஆம் கட்ட அகழாய்வை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் இன்று முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். தமிழக தொல்லியல்துறை சார்பில் 6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் 7 ஆம் கட்ட அகழாய்வு இன்று தொடங்கப்பட்டுள்ளது. கீழடி மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறவுள்ளன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை