இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Feb 13, 2021 239 views Posted By : YarlSri TV
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் திணறிக் கொண்டிருந்த சூழலில், இந்தியா குறைந்த காலகட்டத்திலேயே ஒன்றுக்கு இரண்டாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது. தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நம் நாட்டு மக்களுக்கு செலுத்தப்படுவதோடு மட்டும் அல்லாமல், பிற நாடுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 16ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், அன்று தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 12,143 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,08,92,746 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 103 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,55,550 ஆக அதிகரித்துள்ளதாகவும் 11,395 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதால் 1,36,571 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று உயிரிழப்புகளும் பாதிப்பும் சற்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago