இந்திய மண்ணை பாதுகாக்க வேண்டியது பிரதமரின் கடமை. அந்த கடமையிலிருந்து மோடி தவறிவிட்டார்-ராகுல் காந்தி!
Feb 12, 2021 177 views Posted By : YarlSri TV
இந்திய மண்ணை பாதுகாக்க வேண்டியது பிரதமரின் கடமை. அந்த கடமையிலிருந்து மோடி தவறிவிட்டார்-ராகுல் காந்தி!
சீனாவை எதிர்க்காமல் பிரதமர் மோடி விட்டுக் கொடுத்து விட்டதாக காங்கிரஸ் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றிய போது, “இந்திய மண்ணை பாதுகாக்க வேண்டியது பிரதமரின் கடமை. அந்த கடமையிலிருந்து மோடி தவறிவிட்டார். லடாக் எல்லையில் பதட்டத்தை தடுப்பது தொடர்பான உடன்பாடு சீனாவுக்கு சாதகமாக இருக்கிறது. இந்திய இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய மலைப்பகுதிகள் விட்டு கொடுக்கப்பட்டிருக்கின்றன.
முக்கியமாக சீனாவுக்கு இந்தியா விட்டுக் கொடுத்து விட்டது. கைலாஷ் மலை பகுதியிலிருந்து இந்திய ராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு இடத்தைக்கூட சீனாவுக்கு விட்டுத்தர மாட்டோம் எனக்கூறி நிலையில் ராகுல் விமர்சித்துள்ளார். எல்லைகளை பாதுகாக்க நமது ராணுவம், விமானப்படை , கப்பற்படை தயாராக இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்திய படைகள் கைப்பற்றிய பகுதிகளை பிரதமர், சீனாவிற்கு கொடுத்துவிட்டார். ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் பிரச்சினை நிலவி வருகிறது; தற்போது வரை சீனாவுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது. சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுகிறார், சீனாவுக்கு பணிந்து செல்கிறார். சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார்” என்றார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago