Skip to main content

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2ம் நாளாக ஆலோசனை!

Feb 11, 2021 269 views Posted By : YarlSri TV
Image

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2ம் நாளாக ஆலோசனை! 

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2ம் நாளாக ஆலோசனை நடத்துகிறது.



தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் களமிறங்கிய நிலையில், தமிழக தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குச் சாவடி, வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடுக்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தல் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.



இது தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட குழு, நேற்று சென்னை வந்தடைந்தது. அந்த குழு முதற்கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தலை எத்தனை கட்டமாக நடத்துவது? தேர்தல் தேதியை எப்போது அறிவிப்பது? தபால் வாக்கு முறை அமல்படுத்துவதா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தியது. அப்போது, தமிழ் புத்தாண்டுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரோ அல்லது பிறகோ தேர்தல் நடத்த வேண்டாம் என பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஒருமித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



 சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 2ம் நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள், கடலோர காவல் படை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பங்கேற்றுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை