விபத்தில் படுகாயமடைந்திருந்தவர் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்!
Feb 01, 2021 189 views Posted By : YarlSri TV
விபத்தில் படுகாயமடைந்திருந்தவர் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்!
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி, செட்டிகுளம் நகர்பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர், வீதியை கடக்க முற்பட்டபோது, மதவாச்சியில் இருந்து மன்னார் பகுதி நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் செல்லப்பன் ராச்குமார் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்து தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் பிரச்னைகளுக்கு 100 நாளில் தீர்வு: 1 கோடி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; மு.க.ஸ்டாலின் அதிரடி வாக்குறுதி; 29ம் தேதி முதல் 234 தொகுதிகளில் பிரசாரம்
-
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்டில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை பென் ஸ்டோக்ஸ் ஏற்கக்கூடாது
-
எல்லா விஷயங்களிலும் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டது.. ஜே.பி. நட்டா
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago