Skip to main content

வடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்!

Jan 27, 2021 169 views Posted By : YarlSri TV
Image

வடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்! 

வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசி டோஸ்கள் தேவை என கோரப்பட்டுள்ளது.



இந்த தகவலை வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.



இவ்விடயம் தொடர்பாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.



மேலும் வட.மாகாணத்தில் கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்படவேண்டிய சுகாதாரத் துறையினரின் விபரங்களை சுகாதார அமைச்சுக் கோரியிருந்தது.



அதனடிப்படையில் மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் என 9 ஆயிரத்து 400 பேர் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்றனர்.



அவர்களுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ கல்வியாளர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் என ஆயிரம் பேருக்கும் சேர்த்து 10 ஆயிரத்து 400 பேரின் விவரம் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை