நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் 12 மாடி கார் தரிப்பிடங்களை அமைக்கத் திட்டம்
Jan 27, 2021 190 views Posted By : YarlSri TV
நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் 12 மாடி கார் தரிப்பிடங்களை அமைக்கத் திட்டம்
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக நாட்டின் அநேக மாவட்டங்களில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சால் 12 மாடி கார் தரிப்பிடங்கள் கட்டப்படவுள்ளன.
இதன்படி கொழும்பு 07இலுள்ள நொரிஸ் கனல் வீதியில் கண் மருத்துவமனைக்கு சமீபமாக கார் தரிப்பிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
கொழும்பு பொது மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி வாகனத் தரிப்பிடவசதிகள் இல்லாததால் இப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலை அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அனுமதிப்பதில் பாதகமான விளைவையும் ஏற்படுத்துகிறது.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரமளித்தது.
இதன் முதலாவது திட்டம் கொழும்பு லேக்ஹவுஸ் அருகே தொடங்கியுள்ளதுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை இதற்காக 1.113 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இதேவேளை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, டி.எஸ்.சேனநாயக்க மாவத்தை சுற்றுவட்டம், யூனியன் பிளேஸ், நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் வாகனத் தரிப்பிடங்கள் கட்டப்படுவதுடன் பத்தரமுல்ல, அநுராதபுரம், குருநாகல் ஆகிய இடங்களிலும் கார் தரிப்பிடங்களை அமைக்கும் திட்டமுள்ளதாகக் கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago