கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா!
Jan 22, 2021 211 views Posted By : YarlSri TV
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா!
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மட்டக்களப்பில் 533பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக டாக்டர் நாகலிங்கம் மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸார், செங்கலடி சுகாதார பிரிவிலுள்ள வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேருக்கும் ஏறாவூர் பிரதேசத்தில் ஒருவருக்கும் கோறளைப்பற்று மத்தியில் 2 பேர் உட்பட்ட 11 பேரே புதிய தொற்றாளராக கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும், மட்டக்களப்பு அரசடி கிராம சேவகர் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி சுகாதார பிரிவில் 8 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago